Saturday, June 5, 2010

மனிதம் எங்கே?

மனிதம் எங்கே என்று தேடுவது.  இன்று பெரும்பாலான இடங்களில் காணவில்லை என்பதே உண்மை.  மனிதமே நீ ஆணா அல்லது பெண்ணா?  உண்மையான விளக்கம் தர யாராவது தயாராக இருந்தால் நான் அவர்களுக்கு வழிவிட தயாராக இருக்கிறேன்.  மக்களிடம் மனிதத்தை காணவில்லை என்றல் அதற்கு யார் காரணம்.   நானே மனிதத்தை எனக்குள் தேடியும் காணவில்லை என்று பயந்தே இதை எழுதுகிறேன். 

அது ஏன் என்று யாரிடமாவது கேட்டால் சூழ்நிலை என்பார்கள், என்னிடம் கேட்டாலும் அதே பதில்தான்.  ஆனாலும் மனம் ஒப்பவில்லை.  காலமும் சூழ்நிலையும் மனிதத்தன்மை மாற்றமுடியுமா என்ன?  முடியும் என்பதே இன்றைய உண்மை நிலை.  நானும் இந்த பூவலகின் அடிமை என்ற காரணம். 

நான் என்னை எனக்குள் தேடினேன் ஆனாலும் மனிதம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிட்டது.  நான் என்னுள் இருக்கும் மனிதத்தன்மையை ஆராய்வதற்காகவே எதை எழுதுகிறேன். 




No comments:

Post a Comment